This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, April 30, 2020

ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல்துறையில் சேர்க்க வேண்டும்: PMK

ஊர்க்காவல் படையினரில் தகுதியும், திறமையும் உள்ளவர்களை தமிழ்நாடு காவல்துறையில் சேர்க்க அரசு முன்வர வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/2YkCqnk
Share:

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை தமிழக அரசு அனுமதிக்காது -RBU!

கொரோனா முழு அடைப்பு காலத்தில் காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை கண்காணிக்க பட்டு வருவதாக அமைச்சர் RB உதயகுமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2YqNEH1
Share:

புதுச்சேரியில் முழு அடைப்பு நீட்டிக்கப்படுமா? முதல்வர் கூறுவது என்ன?

புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள பூட்டுதல் நீட்டிக்கப்பட வேண்டுமா அல்லது இல்லையா என்பது குறித்த தனது நிலைப்பாட்டை முடிவு செய்ய மே 2-ம் தேதி அமைச்சரவை கூடும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2KNgXvg
Share:

வெளிமாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அழைத்து வர நோடல் அதிகாரிகள்...

வெளிமாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை சொந்த மண்ணிற்கு அழைத்து வர நோடல் அதிகாரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2SlzO4L
Share:

தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 2,323 ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 906 ஆக உயர்வு...!

from Tamil Nadu News https://ift.tt/35gvpph
Share:

தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக் குழு அமைப்பு: EPS

கொரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக் குழு அமைப்பு...!

from Tamil Nadu News https://ift.tt/3f5qCLP
Share:

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க புதிய இணையதளம் துவக்கம்!

//nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/35gVwMA
Share:

Wednesday, April 29, 2020

வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தொடங்குக: PMK

வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தொடங்குக என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/35gqwfG
Share:

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 2162 ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 767 ஆக உயர்வு...!

from Tamil Nadu News https://ift.tt/2SzbAED
Share:

முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..!

மே 3 நாடு தழுவிய ஊரடங்கு முடிவடையும் நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது..!

from Tamil Nadu News https://ift.tt/3bOyv6b
Share:

ஜல் சக்தி துறையின் கீழ் காவிரி ஆணையம்; மாநில உரிமையை பறிக்கும் செயல் - MKS

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்ததற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு..!

from Tamil Nadu News https://ift.tt/3aMuNsz
Share:

முழு அடைப்பு காரணமாக கோயம்பேடு சந்தையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு!

காய்கறி விற்பனையாளர் மற்றும் பூ விற்பனையாளர் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சந்தை மக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2YeBK2R
Share:

Tuesday, April 28, 2020

சென்னையை கொரோனா இல்லா நகரமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -PMK!

சென்னையை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநகரமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/35fjDLD
Share:

வருகிற மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்

‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் வருகிற மே 4 ஆம் தேது துவங்கி வரும் 28 ஆம் தேதி வரை இருக்கும்.

from Tamil Nadu News https://ift.tt/2YrgsiT
Share:

வரலாறு காணாத விலை ஏற்றத்தில் கடல் உணவு பொருட்கள்; காரணம் என்ன?

மீன்பிடித் தடை காரணமாக தூத்துக்குடியில் கடல் உணவு விலை முன்னோடியில்லாத வகையில் உயர்ந்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3cUSf8q
Share:

சமூக விலகலை கடைபிடிக்க குடை பயன்படுத்தும் விதி; இனி தமிழகத்திலும்!

COVID-19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் சமூக தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ள குடைகளைப் பயன்படுத்துவதற்கான கேரளாவின் தனித்துவமான போக்கு, மேற்குத் தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும் கடைப்பிடிக்க தூண்டியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2VK7j2Q
Share:

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வுகள் மூன்று முக்கிய பாடங்களுக்கு மட்டுமே நடத்தப்படும்...

கொரோனா முழு அடைப்பு காரணமாக கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய மூன்று முக்கிய பாடங்களுக்கு மட்டுமே SSLC தேர்வுகளை வெட்டுவதற்கான விருப்பத்தை மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

from Tamil Nadu News https://ift.tt/3cUMGqz
Share:

தமிழகத்தின் சமீபத்திய கொரோனா வழக்குகளில் 8 குழந்தைகள் இடம்பெற்றனர்...

தமிழகத்தில் புதிதாக பதிவான கொரோனா வழக்குகளில் 8 குழுந்தைகள் இடம்பெற்றுள்ளனர். இதில் 5 நாள் பெண் குழந்தை ஒருவரும் அடக்கம்.

from Tamil Nadu News https://ift.tt/2VMaeID
Share:

தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 2,058 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவால் 25 பேர் உயிரிழந்த நிலையில் 1128 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்!

from Tamil Nadu News https://ift.tt/3aLuwGr
Share:

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறிய ஈரோடு!! சாத்தியமானது எப்படி?

அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து நான்கு கோவிட் -19 நோயாளிகள் குணமடைந்து வெளியேற்றப்பட்டதால், மாவட்டத்தில் இப்போது கொரோனா தொற்று நோயின் பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3aMCsHa
Share:

ஜோதிகா கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என நடிகர் சூர்யா அறிக்கை!!

மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறோம் என நடிகர் சூர்யா அறிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/2ScUk7W
Share:

அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்காதீர்: ஸ்டாலின்!

அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2YeQuPk
Share:

நிஜாமுதீன் மார்க்கஸில் பங்கேற்ற 6 தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்...

தங்கள் விசா விதிமுறைகளை மீறியதாக கூறி ஆறு தாய்லாந்து பிரஜைகள், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இவர்கள் கொரோனா தொற்று காரணமாக அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்தனர் என தகவல்கள் தெரிவிக்கிறது.

from Tamil Nadu News https://ift.tt/2SdQVpg
Share:

சென்னை மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி அவரது வீட்டில் பிடிப்பட்டார்...

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் மருத்துவமனையில் இருந்து தப்பிய பின்னர், காவல்துறை உதவியுடன் அவர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

from Tamil Nadu News https://ift.tt/2yTixsM
Share:

Monday, April 27, 2020

பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும்: EPS

கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2ySi3n6
Share:

20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை: ஊரடங்கை மதித்தால் விரைவில் வெற்றி: PMK

20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை. இதனால் ஊரடங்கை மதித்தால் விரைவில் வெற்றி என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/3f338aj
Share:

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், காவலர்களுக்கு உணவு அளித்த நபருக்கு கொரோனா...

கொரோனா முழு அடைப்பின் போது சென்னை திருவள்ளிகேனி கால்துறை பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு உணவு விநியோகித்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2SfUZ8t
Share:

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி -தமிழக அரசு!

கொரோனா முழு அடைப்பால் வேலை இன்றி தவித்து வரும் தமிழக மக்களுக்கு உதவும் விதமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2KDEw9X
Share:

கேரளா - தமிழ்நாட்டை இணைக்கும் 9 புறவழிச்சாலைகளை மணல் குவித்து அடைத்த காவல்துறை...

கேரளா மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் ஒன்பது புறவழிச்சாலைகளின் அனைத்து நுழைவாயிலிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளில் மணல் குன்று எழுப்பி தமிழக காவல்துறையினர் திருவணந்தபுரம் எல்லையை அடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

from Tamil Nadu News https://ift.tt/2yMuAbu
Share:

கொரோனா முழு அடைப்பால் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் பண்ட மாற்று முறை...

கொரோனா முழு அடைப்பு காரணமாக பண பறிமாற்றம் இன்றி தவிக்கும் மக்கள் சில கிராமங்களில் மீண்டும் பண்ட மாற்று முறையை கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.

from Tamil Nadu News https://ift.tt/2yOErNY
Share:

சென்னை கோயம்பேடு சலூனில் முடிதிருத்தம் செய்தவர்களுக்கு கொரோனா...

கொரோனா முழு அடைப்பு விதி மீறி முடி திருத்தம் செய்யும் கடையை திறந்து வைத்திருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3aMoOE2
Share:

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1937 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று மட்டும் 81 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்!

from Tamil Nadu News https://ift.tt/3cPHILz
Share:

மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என EPS கோரிக்கை!

தமிழகத்திற்கு மத்திய அரசு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரிக்கை... 

from Tamil Nadu News https://ift.tt/3f0NU5F
Share:

முதல்வர் வாகனத்துக்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதா? மறுக்கும் போலீசார்

தமிழக முதல்வர் வாகனம் செல்வதற்காக ஆம்புலன்ஸஸை காவல்துறை சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைத்ததால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2Y8WYPz
Share:

அரசு ஊழியர்களுக்கான ஈட்டு விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம்: தமிழக அரசு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3cP4oeV
Share:

Sunday, April 26, 2020

மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்... மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும்

மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்... மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2W5vOGG
Share:

தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லைகளை அடைக்க 3 அடியில் தற்காலிக சுவர்...

தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லையில் வாகன நடமாட்டத்தைத் தடுக்க வேலூர் மாவட்டம் பொன்னாயில் என்னை சாலையின் குறுக்கே மூன்று அடி சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3eSroM7
Share:

வெப்பநிலை குறைந்த இடங்களில் கொரோனா தீவிரமாக பரவும்: சென்னை IIT

வெப்பநிலை குறைந்த இடங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் என்று ஐஐடி செய்த ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/2W0GqGN
Share:

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1,885 ஆக உயர்வு!

சென்னையில் மட்டும் இன்று 28 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 523 ஆக உயர்வு... 

from Tamil Nadu News https://ift.tt/2zzXa0l
Share:

கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு ஸிங்க் மாத்திரை: TN Govt

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு பணியில் உள்ள அனைத்து துறை களப்பணியாளர்களுக்கும் ஸிங்க் (zinc) மாத்திரைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!!

from Tamil Nadu News https://ift.tt/2VGmqdU
Share:

இறந்தவர் உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் சிறை - தமிழக அரசு

நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம்/தகனம் செய்வதை தடுத்தால் குறைந்தபட்சமாக ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை என தமிழக அரசு தெரிவித்துள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/2VYOmZh
Share:

கோயம்பேடு காய்கறி விற்பனையாளர்களை சோதிக்கும் முடிவில் சென்னை கார்ப்பரேஷன்...

கடந்த சில நாட்களில், வடபழனி சந்தையில் பணிபுரியும் மைனர் சிறுவன் உட்பட ஆலந்தூர், குன்றத்தூரில் காய்கறி விற்பனையாளர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

from Tamil Nadu News https://ift.tt/2xRRIFA
Share:

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா வந்தது எப்படி?

கொரோனா முழு அடைப்பின் போது, ​​சென்னையின் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற பதினைந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றும் இவர்கள் 15 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

from Tamil Nadu News https://ift.tt/2SarlRU
Share:

தமிழக விவசாயிகளுக்கான சலுகை நீட்டிப்பு - முதல்வர் அறிவிப்பு...

விவசாயிகள் செலுத்தும் விளைப்பொருட்கள் கிடங்கு வாடகைக் கட்டணம் ரத்து; விளைப்பொருட்கள் கிடங்கிற்கான மேலும் ஒரு மாத வாடகையை விவசாயிகள் செலுத்த தேவையில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவிப்பு!!

from Tamil Nadu News https://ift.tt/3aBHJS4
Share:

கொரோனாவுக்கு 104 குழந்தைகள் பாதிப்பு: குடும்பம் காக்க ஊரடங்கை மதிப்பீர்!

தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என PMK நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/2x83Dyr
Share:

Saturday, April 25, 2020

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.  

from Tamil Nadu News https://ift.tt/3bFzA0a
Share:

APL அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம்; மத்திய அரசு ஒப்புதல்...

புதுச்சேரியில் APL அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் அஸ்வானி குமார் உள்துறை அமைச்சகத்திடம் (MHA) அனுமதி பெற்றுள்ளார் என்று முதல்வர் தெரிவித்தார்.

from Tamil Nadu News https://ift.tt/2yEUD4l
Share:

சென்னையை ஒட்டியுள்ள மூன்று மாவட்டங்களிலும் முழுமையான ஊரடங்கு...

கொரோனா வைரஸ் நாவலின் பரவலைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஐந்து நகராட்சி நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் கடுமையான பூட்டுதலை அறிவித்தன.

from Tamil Nadu News https://ift.tt/2VX9Aqu
Share:

தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1821 ஆக உயர்வு!

சென்னையில் மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில்,  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 495 ஆக அதிகரிப்பு.. 

from Tamil Nadu News https://ift.tt/2KApS3m
Share:

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/2x7sp1P
Share:

ஏப்., 30 ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு: EPS

ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவு!

from Tamil Nadu News https://ift.tt/2VDio5T
Share:

தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம்: TN Govt.

தமிழகத்தில் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

from Tamil Nadu News https://ift.tt/2yHRIYN
Share:

Friday, April 24, 2020

மோசமாகும் சென்னையில் நிலை; கூடுதல் பொறுப்புணர்வு தேவை- PMK!

சென்னையில் நிலைமை சீரடையும் வரை ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க மக்கள் முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/3azhXO3
Share:

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய உத்திகளை செயல்படுத்த வேண்டும் -அன்புமணி!

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய உத்திகளை செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3bOi0a8
Share:

கொரோனாவுக்கு எதிராக முககவசம் அணிவோம்; விஜயகாந்த் வேண்டுகோள்...

கொரோனாவில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முககவசம் அணிவோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3aHUo65
Share:

ஆவின் பொருட்களை விநியோகம் செய்ய Dunzo, Zomato-வுடன் தமிழக அரசு ஒப்பந்தம்...

ஆவின் தயாரிப்புகளை பொதுமக்களிடன் கொண்டு சேர்பதற்காக டன்ஸோ மற்றும் ஜொமாடோவுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3cFrfto
Share:

மளமளவென உயர்ந்த தங்கத்தின் விலை .. 10 கிராம் தங்கத்தின் விலை என்ன?

ஏப்ரல் 26 அன்று, அக்ஷயா திரிதியா (Akshaya Tritiya) என்பதால், தங்கத்தின் தேவை அதிகரிப்பதைக் காணலாம். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை சந்தையில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ 315 அதிகரித்து 46,742 ரூபாயாக உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3cJWMKH
Share:

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1755 ஆக உயர்வு: சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதி வரை போடப்பட்டு உள்ளது. அனைத்து மாநில அரசுகளும் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/3avbJyQ
Share:

முழுமையான ஊரடங்கு உத்தரவில் விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் என்ன? முழு பட்டியல்

சென்னை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமல் செய்யபட்டுள்ள முழுமையான ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

from Tamil Nadu News https://ift.tt/2x8EeEY
Share:

கோவையில் 2 பெண் காவலர்கள் உள்பட 3 காவலர்களுக்கு கொரோனா உறுதி

கோவையில் 2 பெண் காவலர்கள் உள்பட 3 காவலர்களுக்கு வெள்ளிக்கிழமை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3bzsH0v
Share:

கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு...

கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் முயற்சியாக, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் கடைகளுக்கு விதிவிலக்கு இல்லாமல் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2VY7N4B
Share:

இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து: சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு: PMK

இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து; சாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

from Tamil Nadu News https://ift.tt/2Kxivtw
Share:

Thursday, April 23, 2020

சென்னையில் வலம் வரும் கொரோனா ஆட்டோ; வைரலாகும் புகைப்படங்கள்...

முழு அடைப்பின் போது கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பற்றி மற்றவர்களை விழிப்புடன் வைத்திருக்கவும், மகிழ்விக்கவும் மக்கள் சில சிறந்த யோசனைகளைக் கொண்டு வருகிறார்கள். 

from Tamil Nadu News https://ift.tt/353yfxv
Share:

கடல் உணவு பொருட்களை online-ல் வாங்க தமிழக அரசின் ‘மீன்கள்’ செயலி...

முழு அடைப்பின் போது சென்னையில் உள்ள கடல் உணவு பிரியர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு ‘அரசு மீன் கடை’-களைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு கடல் உணவுகளை வழங்குவதற்காக ‘மீன்கள்(Meemgal)’ என்ற பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3cLE2dI
Share:

பிள்ளைகளை வளர்ப்பதற்கு இது நல்ல ஒரு சந்தர்ப்பம் - நடிகர் வடிவேலு!

கொரோனா முழு அடைப்பினை நாம் நமது பிள்ளைகளை வளர்பதற்கான நல்ல ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2W7JPE7
Share:

சேலம், கோவை தொடர்ந்து சென்னை அம்மா கேன்டீன்களிலும் இலவச உணவு...

முழு அடைப்பு முடியும் வரை நகரம் முழுவதும் உள்ள அம்மா கேன்டீன்கள் இலவசமாக உணவை வழங்கும் என்று கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வியாழக்கிழமை அறிவித்தது.

from Tamil Nadu News https://ift.tt/2VO4LQc
Share:

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1683 ஆக உயர்வு!

சென்னையில் மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில்,  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு.. 

from Tamil Nadu News https://ift.tt/3eJXMQO
Share:

தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!

ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/2xGL9pf
Share:

மே 3 பிறகு 33 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்: TN GOVT

 மே 3-ம் தேதிக்குப் பிறகு 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3cDRDE3
Share:

கொரோனாவுக்கு எதிரான பணியில் மருத்துவர்களின் சேவை மகத்தானது: EPS

கொரோனாவுக்கு எதிரான பணியில் மருத்துவர்களின் சேவை மகத்தானது என தமிழக முதல்வர் பழனிசாமி பெருமையுடன் தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/3cKDXab
Share:

மது & புகையிலை வணிகத்திற்கு முற்றிலுமாக தடைவிதிக்க வேண்டும்: PMK!

கொரோனாவை வேகமாக பரப்பும் புகையிலை பொருட்களை பயன்படுத்த அனுமதிக்காதீர் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/3eJyeDG
Share:

Wednesday, April 22, 2020

வெற்றிக்கு முன்பே விலகல் ஆபத்தானது: மக்களுக்கு அரசு நம்பிக்கையூட்ட வேண்டும்: PMK

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்த சில நாட்களில் கட்டுப்படுத்துவது சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை மருத்துவத்துறை புள்ளிவிவரங்கள் ஏற்படுத்தியுள்ளன. அதேநேரத்தில் இலக்கை  எட்டுவதற்கு முன்பே சலித்துக் கொண்டு, சுணங்குவது நம்மை வெற்றிக்கு பதிலாக தோல்விக்கு அழைத்து சென்று விடும். எனவே, கொரோனா நோய் ஒழிப்புப் போரை மக்கள் உற்சாகத்துடன் தொடர வேண்டும்.

from Tamil Nadu News https://ift.tt/2XWPQpu
Share:

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1629 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 635-லிருந்து 662 ஆக உயர்வு... 

from Tamil Nadu News https://ift.tt/34TtU02
Share:

கொரோனா தோற்றால் உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சம் நிதியுதவி: EPS

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் உயிரிழக்க நேரிட்டால் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2yCfLs8
Share:

ஏப்ரல் 24, 25 ஆம் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும்: TN Govt

மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களுக்கு ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/3cAFvnh
Share:

Tuesday, April 21, 2020

இஸ்லாமியர்களின் பிளாஸ்மா கொடையை பாராட்டும் பாஜக பிரபலங்கள்...

கடந்த மாதம் டெல்லியில் நடந்த தப்லி-இ- ஜமாஅத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட பல முஸ்லிம்கள் இப்போது தங்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

from Tamil Nadu News https://ift.tt/2yv2IZt
Share:

கரூர் அரசு மருத்துவமனையின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்...

கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், கரூர் அரசு மருத்துவமனையில் சுமார் 260 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/3arzwQ8
Share:

சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது; இராமதாசு எச்சரிக்கை!

ஊரடங்கு விதிகளை பின்பற்றாவிட்டால் சிங்கப்பூர் நிலை தான் தமிழகத்திற்கு ஏற்படும் என பாமக நிறுவனர் இராமதாசு எச்சரித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2xFEj3n
Share:

கொரோனா நோயாளிக்காக கோவையிலிருந்து மங்களூருக்கு விமான சேவை...

உள்நாட்டு விமான சேவைகள் மூடப்பட்ட பின்னர் இந்தியாவில் முதன்முறையாக, ஒரு கொரோனா நோயாளிக்காக கோயம்புத்தூரிலிருந்து மங்களூருக்கு விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3cAt9LU
Share:

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள் - மு.க.ஸ்டாலின்

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா வந்திருப்பது மனவேதனை தருகிறது என மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2VL1gtU
Share:

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1596 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 635-லிருந்து 813 ஆக உயர்வு... 

from Tamil Nadu News https://ift.tt/2VM8Rbx
Share:

தமிழகத்தில் IT ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும்: TN Govt

தமிழகத்தில் ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/2wW5OoR
Share:

சென்னையில் 25 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று.. மாநிலத்தில் மொத்தம் பாதிப்பு 1500

சென்னையில் ஒரு பத்திரிகையாளர் உட்பட உள்ளூர் தொலைக்காட்சி செய்தி சேனலில் பணிபுரியும் சுமார் 25 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/2VMX5Oc
Share:

மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளிக்க வேண்டும்: பழனிசாமி!

மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!! 

from Tamil Nadu News https://ift.tt/3eFwxXC
Share:

Monday, April 20, 2020

கொரோனா ஆபத்தில் இதழாளர்கள்: செய்தியாளர் சந்திப்புகளை கைவிடுவீர் -PMK!

செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், செய்தியாளர் சந்திப்புகளை கைவிடுவிடுமாறு பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3eC28JV
Share:

தமிழகத்தின் டோல் பிளாசாக்களில் சுங்க கட்டணம் 25% குறைப்பு; காரணம் என்ன?

இன்னும் மூன்று மாதங்களுக்கு கட்டண வசூல் நிறுத்தப்பட வேண்டும் என்ற சரக்கு போக்குவரத்து சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்து வரும் நிலையில், தமிழகத்தின் இரண்டு டோல் பிளாசாங்களில் சுங்க கட்டணம் 25% குறைக்கப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3aokXwI
Share:

ஒருங்கிணைந்து உதவி செய்வோம் வாருங்கள்; தொண்டர்களை அழைக்கும் MK ஸ்டாலின்...

அடுத்த இரண்டு மாதங்களில் மாநிலத்தின் நான்கு கோடி மக்களைச் சென்றடைய “ஒன்றிணைவோம் வா” என்ற மாநிலம் தழுவிய பல வடிவ முயற்சியை திமுக தலைவர் M.K.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3aqMpdo
Share:

கிராம - குடிசைத் தொழில்கள் அடுத்த வாரத்தில் மெதுவாக பணிகளை துவங்கலாம்...

தமிழ்நாட்டில் COVID-19 கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதிகளில் செயல்படும் கிராம மற்றும் குடிசைத் தொழில்கள் அடுத்த வாரத்தில் மெதுவாக பணிகளை துவங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

from Tamil Nadu News https://ift.tt/2Voktm9
Share:

திருடர்கள் உதவியுடன் மது பாட்டில்களை திருடிய காவல்துறை அதிகாரிகள்...

முழு அடைப்பின் போது பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைத்திருந்த 50 மதுபான பாட்டில்களை திருடியதாக சென்னையை சேர்ந்த இரண்டு காவலர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/3eBKnuf
Share:

கொரோனா நோயால் இறந்தவர்கள் உடலில் இருந்து வைரஸ் பரவுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்

கொரோனாவால் இறப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த நோயினால் சில நல்ல மனிதர்களை நாம் இழக்கிறோம். அவர்களை மரியாதையுடன் அனுப்ப வேண்டியது சக மனிதர்களாகிய நமது கடமை. தயவுசெய்து யாரும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் வைத்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2yxrVm4
Share:

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1520 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக அதிகரிப்பு!

from Tamil Nadu News https://ift.tt/3amDuJR
Share:

தமிழகத்தில் மே 3 வரை எந்த தளர்வுகளும் இல்லை.... : அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்த தளர்வுகளும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/2VHJveR
Share:

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் அளித்த விஜயகாந்த்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி தருவதாகவும், அதை அடக்கம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3ajMBLv
Share:

10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும். அதற்கான அட்டவணை மற்றும் தேர்வு நடைபெறும் மையம் ஆகியவை ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2KlhyUM
Share:

மருத்துவ பணியாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கவச உடைகளை வழங்க வேண்டும்: PMK

மருத்துவர்களை கடவுளாக மதிப்பது உண்மை எனில், மனிதர்களாகவாவது இறுதிச் சடங்கு செய்ய அனுமதிப்பீர் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2yrg60v
Share:

Sunday, April 19, 2020

ஊரடங்கு தளர்வா...? அந்தத் தவறை மட்டும் செய்யக்கூடாது; எச்சரிக்கும் இராமதாசு!

ஊரடங்கு தளர்வு என்பது மே 3-ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கப்படுவதற்கு வழி வகுத்துவிடும், எனவே அந்த தவறை மட்டும் செய்யக்கூடாது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3bmMmRb
Share:

ஆதரவின்றி கிடந்த முதியவரின் சடலத்தை தகனம் செய்த காவல்துறை ஆய்வாளர்...

மனதை நொறுக்கும் ஒரு சம்பவத்தில், ஞாயிற்றுக்கிழமை சென்னை நகர ஆய்வாளர் ஒருவர் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இறந்த ஒருவரை தகனம் செய்துள்ளார். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரது உடலை, வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையில், ஆய்வாளர் இந்த செயலை செய்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3cIzwgr
Share:

கட்டண உயர்வுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் டோல் பிளாசாக்கள்...

இன்னும் மூன்று மாதங்களுக்கு கட்டண வசூல் நிறுத்தப்பட வேண்டும் என்ற டிரான்ஸ்போர்டர்களின் கோரிக்கையின் மத்தியில், மாநிலத்தில் கட்டண வசூலை மீண்டும் தொடங்க 48-ல் இரண்டு டஜன் டோல் பிளாசாக்கள் முடிவு செய்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3coLOKC
Share:

வீடியோ-அழைப்புகள் மூலம் மட்டுமே இனி வழக்குகள் விசாரிக்கப்படும் -உயர்நீதிமன்றம்...

கொரோனா முழு அடைப்பு காலம் முடியும் வரை இனி வீடியோ-அழைப்புகள் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும், மேலும் உத்தரவு வரும் நீதிமன்ற அரங்குகளில் நீதிபதிகள் அமர்ந்து வழக்குகள் விசாரிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/34P5wMP
Share:

கொரோனா முழு அடைப்பிற்கு மத்தியில் சேலம் அம்மா உணவகத்தில் இலவச உணவு?

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவு அளிக்கும் அம்மா உணவகங்களில் திங்கள் முதல் இலவசமாக உணவு வழங்கப்படும் என அதிமுக-வின் சேலம் பிரிவுகள் தெரிவித்துள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/2VoBZqu
Share:

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1,477 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 365-லிருந்து 411 ஆக உயர்வு... 

from Tamil Nadu News https://ift.tt/3blTblV
Share:

PCR-ல் தான் கொரோனாவை கண்டறிய முடியும் என்றால் RAPID எதற்கு...? - TTV

ரேபிட் டெஸ்டில் கொரோனாவை கண்டுபிடிக்க முடியாது, பிசிஆர்-ல் சோதிக்க வேண்டும் என்றால் எதற்காக காத்திருந்தீர்கள்..? என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/3cxwhYK
Share:

கொரோனா தடுப்புப்பணி: ஊழியர்களுக்கு சம்பளம், உபகரணங்கள் வழங்க வேண்டும்- TTV

கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட தமிழக அரசு முன் வரவேண்டும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/3csWqIo
Share:

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு ஐகோர்ட் வக்கீல்கள்...

கொரோனா வைரஸ், ஊரடங்கு நிவாரண நிதிக்கு சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இருவர், தலா, ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/2VhQjRn
Share:

அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும்: தமிழக அரசு

அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2Vnjvql
Share:

தமிழகத்தில் மதுவுக்கு ஆதரவாக திட்டமிட்டு செய்யப்படும் பரப்புரைகள் கண்டிக்கத்தக்கவை: PMK

தமிழகத்தில் மதுவுக்கு ஆதரவாக திட்டமிட்டு செய்யப்படும் பரப்புரைகள் கண்டிக்கத்தக்கவை என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2ypvwT6
Share:

Saturday, April 18, 2020

தினசரி 50 KM நடைபயணம்; கடும் வெப்பத்தில் வாழ்க்கையை தேடும் விவசாயிகள்...

குறு நிலங்களில் காய்கறி பயிரிட்ட விவசாயிகள் இந்த முழு அடைப்பு காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

from Tamil Nadu News https://ift.tt/34KQRCm
Share:

அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு சுங்கக்கட்டண விலக்கு தர வேண்டும் -PMK!

அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு சுங்கக்கட்டண விலக்கு தர வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2VJi1W8
Share:

அரசு பேருந்துகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்கும் சுகாதார ஊழியர்கள்...

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தங்களை அதிகபட்ச அச்சுறுத்தலுக்கு உட்படுத்தும் முன்னணி தொழிலாளர்களில் சுகாதாரத்துறை ஊழியர்களும் உள்ளனர். ஆனால் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படாமல், அரசு பேருந்துகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க பணிக்கப்படுகின்றனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2yoQEsv
Share:

மெட்ராஸ் உயர்நீதிமன்ற அலுவலக ஊழியருக்கு கொரோனா என தகவல்...

மெட்ராஸ் உயர்நீதிமன்ற அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2RRfgBb
Share:

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1,372 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180-லிருந்து 283 ஆக உயர்வு... 

from Tamil Nadu News https://ift.tt/2RN6DHw
Share:

கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன? : MKS கேள்வி..

பரிசோதனைக் கருவிகள் எத்தனை, என்ன விலை, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2ynSoCs
Share:

இருள் சுரங்கத்திற்கு வெளியே ஒளி தெரிகிறது: இன்னும் கவனம் தேவை - PMK!

இனிவரும் காலங்களில் மக்கள் தேவையின்றி வெளியில் வராமல் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து கொரோனா வைரஸ் நோயை விரட்ட ஒத்துழைக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை!! 

from Tamil Nadu News https://ift.tt/2Kgjf64
Share:

Friday, April 17, 2020

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய 12,000 சோதனை கிட்கள் வந்தன

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய 12 ஆயிரம் சோதனை கிட்கள் வந்துள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/2RJ9nG0
Share:

Weather Updates: நாட்டின் எந்த பகுதிகளில் மழை பெய்யும், வெப்பநிலை நிலவரம் என்ன?

நாட்டில் கோடை காலம் தொடங்கியது. அடுத்த 24 மணி நேரத்தில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மிதமான மழை இருக்கும். இதனால் சற்று வெப்பநிலை குறையும்.

from Tamil Nadu News https://ift.tt/2VfqRMg
Share:

அரசியல் வெறுப்புணர்வை அள்ளி வீசுவது தமிழக முதல்வருக்கு அழகல்ல -கே. பாலகிருஷ்ணன்

மூன்று நாட்களில் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்பது எந்த மருத்துவக்குழுவின் கண்டுபிடிப்பு என்பதையும் தமிழக முதல்வர் விளக்கிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழக மாநிலப் பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2z2iHOG
Share:

100 நாள் வேலை திட்டத்திற்கான ஒரு நாள் ஊதியம் உயர்த்தப்பட்டது -தமிழக அரசு அரசாணை வெளியீடு

100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2yjxq7E
Share:

விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது!!

தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2KbQIi7
Share:

கதறவிடும் காவல்துறை.. திருப்பூரை அடுத்து சேலத்திலும் துரத்தும் ட்ரோன்...

முழு அடைப்பு விதிகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்துவது காவல்துறைக்கு தலைவலியாகிவிட்டது. சாலைகளில் வருபவர்களைக் கட்டுப்படுத்த நேரம் போதாது காவல்துறையினர் தவித்து வரும் நிலையில் சிறிய பாதைகளில் கூடி, மரங்களுக்கு அடியில் விளையாடும் மக்களுடன் தற்போது காவல்துறையினர் போராடி வருகின்றனர்.

from Tamil Nadu News https://ift.tt/2RLkeiE
Share:

Thursday, April 16, 2020

தமிழகத்தை மீட்கும் சவாலை சாதிப்பது இளைஞர்கள் கைகளில் உள்ளது -PMK...

தமிழகத்தை மீட்கும் சவாலை சாதிப்பது இளைஞர்கள் கைகளில் உள்ளது என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3cBDxDl
Share:

Lockdown-ல் கைப்பற்றப்பட்ட வாகனங்களை விடுவிக்க DGP திரிபாதி உத்தரவு...

முழு அடைப்பு விதிமுறைகளை மீறியதற்காக மார்ச் 24 முதல் கைப்பற்றப்பட்ட வாகனங்களை விடுவிக்க DGP திரிபாதி வியாழக்கிழமை, உத்தரவிட்டார். 

from Tamil Nadu News https://ift.tt/3et5nTU
Share:

கோவை மருத்துவக் கல்லூரி டீன் அசோகன் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார்...

கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் (CMCH) டீன் டாக்டர் அசோகன், தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்...

from Tamil Nadu News https://ift.tt/2KdVxaE
Share:

கோவிட் -19: 3000+ தொற்றுடன் முதலிடத்தில் மகாராஷ்டிரா; தமிழகத்தில் 62 பேர் மீட்பு

நாடு முழுவதும் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என MHA கூறியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3abtZNv
Share:

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

from Tamil Nadu News https://ift.tt/34GhGHM
Share:

கொரோனா பாதித்து உயிரிழந்தால் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்: DMK கூட்டணி கட்சிகள் தீர்மானம்

கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என கூட்டணி கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3croKL1
Share:

மராட்டியத்தில் உணவு, இடமின்றி தவிக்கும் தமிழகத்தினரை காப்பாற்ற வேண்டும்: PMK

மராட்டியத்தில் உணவு, இடமின்றி தவிக்கும் தமிழகத்தினரை காப்பாற்ற வேண்டும்  என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2VfVFNb
Share:

இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ. 500 மலிவு விலை மளிகை பொருட்கள் வழங்கப்படும்

ரேஷன் கடைகளில் இன்று முதல் 500 ரூபாய் மதிப்புள்ள மலிவு விலை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3bgQCRW
Share:

Wednesday, April 15, 2020

இளைஞர்களே... நோயை வாங்கி, வாழ்க்கையை தொலைக்காதீர் -இராமதாசு

கொரோனா முழு அடைப்பு காலத்தில் இளைஞர்கள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும், நோயை வாங்கி வாழ்க்கையை தொலைக்காதீர் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2RJa6a6
Share:

தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மீண்டும் மாற்றம்...!

கொரோனா வைரஸ் காரணமாக வங்கிகள் இயங்கும் நேரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2xBhz4a
Share:

வேட்டி அவிழ்ந்தா என்ன, carrom board வச்சு மறைச்சுபேன்... திருப்பூர் இளைஞனின் Video...

முழு அடைப்பு விதிகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்துவது காவல்துறைக்கு தலைவலியாகிவிட்டது. சாலைகளில் வருபவர்களைக் கட்டுப்படுத்த நேரம் போதாது காவல்துறையினர் தவித்து வரும் நிலையில் சிறிய பாதைகளில் கூடி, மரங்களுக்கு அடியில் விளையாடும் மக்களுடன் தற்போது காவல்துறையினர் போராடி வருகின்றனர்.

from Tamil Nadu News https://ift.tt/2VbRv8P
Share:

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் பட்டியல்...

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) புதன் அன்று கொரோனா சோதனை மேற்கொள்ளும் 176 அரசு ஆய்வகங்கள் மற்றும் 78 தனியார் ஆய்வகங்களின் பட்டியலை வெளியிட்டது.

from Tamil Nadu News https://ift.tt/3afP3lY
Share:

ஆம்பூரை தொடர்ந்து வானியம்பாடியும் No-Go மண்டலமாக அறிவிக்கப்பட்டது...

நெரிசலான வானியம்பாடி கோட்டை பகுதியில் இருந்து ஒரு கொரோனா வைரஸ் வழக்கு பதிவாகியுள்ள நிலையில், வியாழக்கிழமை முதல் நகரத்தை ஒரு No-Go மண்டலமாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2z5fRZr
Share:

550 தனிமைப்படுத்தல் படுக்கைகளுடன் உருமாற்றப்பட்ட சென்னை வர்த்தக வளாகம்...

கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் G.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை 550 படுக்கைகள் கொண்ட நிறுவன தனிமைப்படுத்தப்பட்ட வார்டை நகரின் அலந்தூர் சுற்றுப்புறத்தில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் தொடங்கினார். 

from Tamil Nadu News https://ift.tt/3cj5EqD
Share:

22 தமிழக மாவட்டங்கள் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களாக அறிவித்த மைய அரசு

தமிழகத்தில் சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி 214 பேர் பாதிப்பு, கோயம்புத்தூரில் 126 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.

from Tamil Nadu News https://ift.tt/2XFt991
Share:

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்! 

from Tamil Nadu News https://ift.tt/2xwg9rQ
Share:

கொரோனா வார்டாக பயன்படுத்திக்கொள்ள விடுதியை வழங்குகிறது சென்னை IIT!!

சென்னையில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த மாநகராட்சிக்கு உதவும் விதமாக சென்னை ஐஐடி நிர்வாகம் விடுதி ஒன்றை அளிக்க முன்வந்துள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/2VbjaH9
Share:

கொரோனா பரிசோதனைக்காக 40,032 PCR கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கியது டாடா நிறுவனம்..!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40,032 PCR கருவிகளை அரசுக்கு வழங்கியது டாடா நிறுவனம்!!

from Tamil Nadu News https://ift.tt/2wJkcRe
Share:

Tuesday, April 14, 2020

கொரோனா இல்லாத தமிழகத்தை விரைந்து உருவாக்க வேண்டும்: PMK

ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுவதை தடுப்பது அரசு மற்றும் மக்கள் கைகளில் தான் உள்ளது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2K2xISW
Share:

வீடுகளுக்கான மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; அன்புமணி வலியுறுத்தல்...

கொரோனா முழு அடைப்பால் மக்கள் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், வீடுகளுக்கான மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2XzZCO3
Share:

சென்னையை தொடர்ந்து சேலத்திலும் தற்போது முக கவசம் அணிவது கட்டாயம்...

கொரோனா பரவுதல் தடுப்பு முயற்சியாக சேலம் மாநகராட்சிப் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வரும் நபர் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2REC4DW
Share:

பாரம்பரிய படகுகள் மட்டும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லலாம்... -tnGovt

பாரம்பரிய மற்றும் சிறிய மோட்டார் பொருத்தப்பட்ட படகுகள் மூலம் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கடலோரப் பகுதிகளின் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு...

from Tamil Nadu News https://ift.tt/2wIT3Ok
Share:

தமிழகத்தில் TASMAC கடைகள் திறக்கப்படுமா? அரசுத் தரப்பு தெரிவித்தது என்ன?

முழு அடைப்பு காலம் நீட்டிக்கப்பட்டதை அடுத்து, அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களும், பார்களும் ஏப்ரல் 30 வரை தமிழகத்தில் மூடப்படும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2K6fShT
Share:

தமிழகத்தில் 12-வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாவதில் புது சிக்கல்...

12-வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலத்தாமதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

from Tamil Nadu News https://ift.tt/2ycfoEi
Share:

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு.... மொத்த எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2ycIhAb
Share:

உங்களை பாதுகாத்து கொள்வதே குடும்பத்தினருக்கு நீங்கள் தரும் பரிசு: ரஜினி

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் அரசுகள் விதிக்கும் விதிமுறையை கடைபிடிக்குமாறு  ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் வேண்டுகோள்!!

from Tamil Nadu News https://ift.tt/3em5ctu
Share:

புத்தாண்டு 2020: தமிழ் புத்தாண்டு எவ்வாறு கொண்டாடப்படும்....

சில சுவையான தென்னிந்திய உணவுகளைத் தயாரித்து தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

from Tamil Nadu News https://ift.tt/2Vpib54
Share:

Monday, April 13, 2020

மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கு நீடிப்பு.... பொறுப்புடன் பின்பற்ற வேண்டும்!

மக்கள் அனைவரும் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/3ejW1cX
Share:

மக்கள் பசியால் வாடாமல் பார்த்துக் கொள்வது அரசின் பொறுப்பு -PMK

ஊரடங்கை கடைபிடிப்பது மக்களின் கடமை; மக்கள் பசியால் வாடாமல் பார்த்துக் கொள்வது அரசின் பொறுப்பு என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2K4Xt50
Share:

ஒரு வாரத்தில் மூன்றாவது புலி மரணம்; தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பதிவானது...

தமிழகத்தின் நீலகிரியில் உள்ள உள்ள மசினகுடி வனத் தொடரில் உள்ள அவரல்லா ஓடையில் திங்கள்கிழமை எட்டு வயது புலி சடலமாக கிடைத்துள்ளது என வன வரம்பு முடலை புலி ரிசர்வ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/3b2gReV
Share:

புதிய நேர கட்டுப்பாட்டுடன் மீண்டும் களமிறங்கும் TASMAC கடைகள்...

கொரோனா முழு அடைப்பு நீட்டிப்பு காலதில் TASMAC புதிய விதிமுறைகளை கொண்டு மீண்டும் சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

from Tamil Nadu News https://ift.tt/2V40Uzo
Share:

முக கவசம் இன்றி இனி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது... மீறினால் தண்டனை...

கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு இனி வீடுகளில் இருந்து வெளியேறும் போதெல்லாம் முகமூடி அணிவது கட்டாயம் என்று சென்னை நகர குடிமை அமைப்பு திங்களன்று தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2XxPMwf
Share:

தமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படலாம்...

எதிர்வரும் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் மாநில வாரிய பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது ஒரு மாதம் வரை தாமதமாகலாம் என கூறப்படுகிறது...

from Tamil Nadu News https://ift.tt/2V3pRuC
Share:

தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் நாராயணசாமி

ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தை அடுத்து புதுச்சேரி மாநிலமும் இணைந்தது.

from Tamil Nadu News https://ift.tt/3a70Frm
Share:

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை - பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை; ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/34vKNO2
Share:

Railway Recruitment: தென் இந்தியா ரயில்வே வேலைவாய்ப்புகள் "www.rrcmas.in"

தென் இந்தியா ரயில்வேக்கு உட்பட்ட பிராந்தியத்தில் மொத்தம் 600 காலியிடங்கள் உள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

from Tamil Nadu News https://ift.tt/3aboYEU
Share:

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி...

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/34BwU0L
Share:

தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு

தமிழகத்தில் ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2V5awKk
Share:

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தமிழகத்தில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ரூபாய் 500 மதிப்பிலான 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2wzwTOm
Share:

TNPSC தலைவராக கா.பாலச்சந்திரன் IAS நியமனம்: TN Govt.,

டிஎன்பிஎஸ்சி தலைவராக கா.பாலச்சந்திரன் ஐஏஎஸ் நியமனம் செய்து  தமிழக அரசு உத்தரவு!!

from Tamil Nadu News https://ift.tt/2Ry3QSE
Share:

Sunday, April 12, 2020

ஊரடங்கிலிருந்து 16 தொழில்களுக்கு விலக்களிப்பது மிகவும் ஆபத்தானது: PMK!

உணவு, விவசாயம், மருந்து உற்பத்தி மற்றும் வினியோகம் போன்ற அத்தியாவசிய தேவைகள் தவிர மீதமுள்ள எந்தவிதமான தொழிற்சாலைகளையும் இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/3b6HvTN
Share:

தமிழக அரசின் கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்த மத்திய அரசு...

தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் என மத்திய அரசுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2Vrazib
Share:

கொரோனா: துபையில் பணியாற்றும் தமிழர்களை காக்க நடவடிக்கை தேவை- PMK

துபையில் பணியாற்றும் தமிழர்களை காக்க நடவடிக்கை தேவை என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/3aZSbDP
Share:

அரசுக்கு சொந்தமான ஆவின் அதன் சந்தைப் பங்கை அதிகரித்துள்ளதாக தகவல்...

அரசு துறைகளில் உள்ள வணிகங்கள் அனைத்தும் போராடி வரும் நேரத்தில், அரசுக்கு சொந்தமான ஆவின் அதன் சந்தைப் பங்கை அதிகரித்து லாபகரமான வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிகிறது.

from Tamil Nadu News https://ift.tt/3a68Hkp
Share:

விவசாயிகளுக்கு உதவ மாநிலம் முழுவதும் 2,061 நேரடி கொள்முதல் மையங்கள்...

டாக்டர் அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோரது பிறந்த நாள் விழாக்கள் முறையே ஏப்ரல் 14 மற்றும் ஏப்ரல் 17 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப்படவுள்ளது. இந்த நாட்களில் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3b7YxRu
Share:

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1000-த்தை கடந்தது...

தமிழகத்தில் ஞாயிறு அன்று மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1075-ஆக அதிகரித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2JZOXUU
Share:

சுமார் 10,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்திக்க தயாராகும் தமிழக அரசு...

முழு அடைப்பு காரணமாக ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசு சுமார் 10,000 கோடி மதிப்புள்ள பணப் பற்றாக்குறையை சந்திக்க வாய்ப்புள்ளது என்றும், இதன் மூலம் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி நிதி திரட்டவும் மாநிலம் திட்டமிட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

from Tamil Nadu News https://ift.tt/2V5CvcR
Share:

அரசு பள்ளிகளில் அடுத்தாண்டு மாணவர் சேர்க்கை Online முறையில் நடைபெறும்...

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்-லைன் முறையில் நடைபெறலாம் என தெரிகிறது.

from Tamil Nadu News https://ift.tt/2xc2Tsl
Share:

தமிழக விவசாயிகள் பலர் அடுத்த ஆண்டு மஞ்சள் சாகுபடியை நிறுத்தக்கூடும்...

கொரோனா பயத்தால் பலரது வீட்டீல் மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன் மஞ்சள் கிடங்கிளேயே தேங்கியிருப்பதாக தெரிகிறது.

from Tamil Nadu News https://ift.tt/2y6aGb6
Share:

சென்னையில் பேக்கரிகளை திறக்க சென்னை கார்ப்பரேஷன் அனுமதி அளித்தது...

சென்னை நகரத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் திறந்திருக்கும் என்று சென்னை கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/39XmD00
Share:

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் ஒரு உயிர் பலி; அச்சத்தில் மக்கள்...

கொரோனா பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45 வயது பெண்மணி ஒருவர் பலியானார். 

from Tamil Nadu News https://ift.tt/2RsUxDh
Share:

பயன்படுத்திய முகமூடிகளை பத்திரமாக அப்புறப்படுத்துவது எப்படி தெரியுமா?

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்படாத வீடுகளில் இருந்து முகமூடிகள், கையுறைகள் மற்றும் பிற திடக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை சென்னை கார்பரேசன் பட்டியலிட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/34wqLmo
Share:

கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்: PMK

கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2yRt6g5
Share:

Saturday, April 11, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இண்டிகோ ஊழியர் மரணம்...

இண்டிகோ விமான நிறுவன ஊழியர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பு!!

from Tamil Nadu News https://ift.tt/2RLvHiv
Share:

ஆயிரத்தை நெருக்கும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் 969 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 969-ஆக அதிகரித்துள்ளது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3a7okbu
Share:

COVID-19: பிரதமர் சொன்னால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் -தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், ஏப்ரல் 14-க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். அவரின் முடிவே தமிழக அரசின் முடிவாகும் எனக்கூறினார்.

from Tamil Nadu News https://ift.tt/3aWy3Cx
Share:

COVID-19: தொடங்கியது முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

இன்றைய ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு அதிகம் எனத் தெரிகிறது. இந்த கூட்டம் முடிந்தவுடன் முதல்வர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

from Tamil Nadu News https://ift.tt/2Rv8fpi
Share:

கொரோனா தடுப்பு பணிகளுக்காக கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்க முதல்வர் கோரிக்கை

தமிழகத்தில் COVID-19 தடுப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக ரூ.1000 கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிட கோரிக்கை வைத்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3edmyc4
Share:

Friday, April 10, 2020

தமிழகத்தில் ஊரடங்கை காலதாமதம் செய்யாமல் அறிவியுங்கள் - ஸ்டாலின்!

ஊரடங்கு குறித்த அறிவிப்பை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள் என தமிழக முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!!

from Tamil Nadu News https://ift.tt/3a0TtNA
Share:

பசி.. பட்டினி.. கொரோனா வைரஸால் இந்த நாடுகளில் வேலையின்மை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒழுங்கமைக்கப்படாத துறையில் பணிபுரியும் சுமார் 400 மில்லியன் மக்கள், அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மற்றும் அதைச் சமாளிக்க 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

from Tamil Nadu News https://ift.tt/2VgBRYE
Share:

முழு அடைப்பிலும் பறக்கும் வாகனங்கள்; அதிரடி திட்டத்துடன் செக் வைத்த காவல்துறை...

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சாலையில் தனியார் வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த ஒரு புதிய வழியை தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்கள் மேற்கொண்டுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/3ccm0Bn
Share:

கொரோனாவிற்கு தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி; பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக 77 கொரோனா நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளது. புதிதாக பதிவான அனைத்து வழக்குகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து பெறப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2UZ13UM
Share:

ஊரடங்கு உத்தரவு குறித்து முக்கிய முடிவு எடுக்க நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்

நாளை மாலை 5 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3cdGp9f
Share:

தமிழகத்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை

19 உறுப்பினர்கள் இடம் பெற்ற மருத்துவ நிபுணர் குழு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஏப்ரல் 14க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/34qR3qb
Share:

சென்னையின் ஆவடியில் அறிமுகமானது 2 கிருமிநாசினி பாதை....

வைரஸ் தடுப்பு கிருமிநாசினிகளை பயணிகளுக்கு தெளிப்பதற்காக ஆவடி கார்ப்பரேஷன் வியாழக்கிழமை இரண்டு கிருமிநாசினி சுரங்கங்களை அறிமுகம் செய்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3eblFAz
Share:

Thursday, April 9, 2020

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு 7 ஆக உயர்வு...

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2RtuFax
Share:

டிவிட்டரில் டிரோல் ஆன நடிகை மதுவந்தியின் சர்ச்சை வீடியோ

மத்திய அரசு மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரண நிதி குறித்து கணக்கு சொல்லிய மதுவந்தி டிவிட்டரில் டிரெண்ட் ஆகி விட்டார். 

from Tamil Nadu News https://ift.tt/2VvyjlF
Share:

40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து: நிவாரணத் திட்டம் வேண்டும்: PMK

40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து இருப்பதால் நிவாரணத் திட்டம் வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3c7IH9C
Share:

தமிழகத்தில் மேலும் 96 கொரோனா வழக்குகள் பதிவானது... மொத்த எண்ணிக்கை 834-ஆக உயர்வு...

தமிழகத்தில் கொரோனாவிற்கு மேலும் 96 சாதகமான வழக்குகள் பதிவாகியுள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 834-ஆக அதிகரித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2Rnovc7
Share:

தமிழகத்தில் Lockdown நீட்டிக்கப்படுமா? தமிழக முதல்வர் கூறுவது என்ன?

நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, கொரோனா வைரஸ் நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டபின், முழு அடைப்பை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வலியுறுத்தினார்.

from Tamil Nadu News https://ift.tt/2JNU3ng
Share:

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது ஏன்?

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு ஆய்வக ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் குறித்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. 

from Tamil Nadu News https://ift.tt/2Xkdig8
Share:

கொரோனா தடுப்பு திட்டமான "IVRS" சேவையை தொடங்கி வைத்தார் EPS!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக "IVRS" சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்!!

from Tamil Nadu News https://ift.tt/2XjLHvo
Share:

Wednesday, April 8, 2020

கொரோனா ஆபத்து விலகவில்லை: சோதனைகளை அதிகரிப்பதே தீர்வு!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தி, கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக மாற்றி விட முடியும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை!! 

from Tamil Nadu News https://ift.tt/2XkNeS0
Share:

தேனியில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா.. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி 23 பேருக்கு பாதிப்பு இருந்தது. இன்று ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் தேனி மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 39 ஆக உயர்ந்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/34sIRWI
Share:

தமிழகத்தில் 48 புதிய கொரோனா வழக்குகள் பதிவானது; மொத்த எண்ணிக்கை 738...

புதன் அன்று தமிழகத்தில் 48 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2RC5mmX
Share:

முழு அடைப்புக்கு மத்தியில் வீடு தேடி வரும் காய்கறிகள்; அரசாங்கத்தின் புதிய முயற்சி...

தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்புடன் இணைந்து 'மொபைல் மார்க்கெட்ஸ்' மூலம் காய்கறிகளை விற்கும் முன்முயற்சியில் நகர கார்ப்பரேஷன் களமிறங்கியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3c0wrYv
Share:

தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்? மத்திய அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 2வது இடத்தில் உள்ள தமிழ் நாட்டிற்கு மற்ற மாநிலங்கை காட்டிலும் குறைவான நிதி மத்திய அரசு ஒதுக்க காரணம் என்ன? என கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம்.

from Tamil Nadu News https://ift.tt/2wsyNQW
Share:

Corona Alert: தமிழகத்தின் முதல் WISK சாவடி திருப்பூரில் அமைக்கப்பட்டது...

தென் கொரியாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சோதனை kiosk-களை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/34ly7Jo
Share:

கொரோனா ஊரடங்கு: மக்களின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை தேவை!

மக்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கொரோனா சிக்கலுக்கு அரசு முழுமையான தீர்வு காண வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/2VevHYT
Share:

தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்வு...

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2xUv13c
Share:

விவசாயிகளுக்கு உதவ பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது தமிழக அரசு...

கொரோனா முழு அடைப்பால் தவிக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் குளிர் சேமிப்பு கட்டணத்தை தள்ளுபடி செய்தது தமிழக அரசு.

from Tamil Nadu News https://ift.tt/2XfN3Yd
Share:

Tuesday, April 7, 2020

தீவிரமாகும் கொரோனா.... ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/3ccksaD
Share:

கொரோனா தொற்று சென்னை தொடர்ந்து முதலிடம்; 2வது இடத்தில் கோவை; மற்ற மாவட்டங்கள் நிலவரம்?

இன்று ஒரே நாளில் சென்னையில் 39 பேருக்கு கொரோனா உறுதிப் படுத்தப்பட்டதால் மொத்தம் எண்ணிக்கை 149ஆக அதிகரித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2UNYzIK
Share:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு WhatsApp மூலம் பாடம் எடுக்கும் அரசு...

கொரோனா முழு அடைப்பினை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்வித் துறை, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் கேபிள் டிவி நெட்வொர்க்குகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2xWmpZI
Share:

இன்று மட்டும் மாநிலத்தில் புதிதாக 69 பேருக்கு COVID-19; 7 பேர் பலி: பீலா ராஜேஷ்

இன்று மட்டும் மாநிலத்தில் புதிய 69 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதுவரை 7 பேர் பலி என தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3e1O8sp
Share:

எம்.எல்.ஏக்கள் ஒரு கோடி ரூபாயைப் பயன் படுத்தலாம்.. தாராளமாக நிதி அளியுங்கள்.. -முதல்வர்

கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அனைவரும் நிதி ஒதுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3e4ibjq
Share:

அவசரகால தொலைபேசி எண்கள்....முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

விவசாயிகளுக்கான பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2yHv9U3
Share:

Monday, April 6, 2020

சமூகப் பரவலின் விளிம்பில் இந்தியா: COVID-19 குறித்து கூடுதல் எச்சரிக்கை தேவை!

தமிழக அரசு பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு வாய்ப்புள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/2UNQnIt
Share:

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 1 பலி; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621-ஆக உயர்வு...

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்திருப்பதாகவும், 50 புதிய வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2UMI6EA
Share:

கொரோனா முழு அடைப்பில் மீன்பிடி படகுகளை இயக்க கட்டுப்பாடு...

முழுஅடைப்பு காலத்தில் மீன்பிடி படகுகள், மாவட்டத்திற்குள் மற்றும் வெளியே செல்ல எர்ணாகுளம் மீன்வள துணை இயக்குனர் தடை விதித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2weroEy
Share:

Sunday, April 5, 2020

கொரோனா: அமெரிக்கா கற்றுத் தரும் படிப்பினையும், நாம் கற்க வேண்டிய பாடமும்: PMK

அமெரிக்கா கற்றுத் தரும் படிப்பினையும், நாம் கற்க வேண்டிய பாடமும் என்று தெரிவித்து பா.ம.க நிறுவனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/3e3OxuL
Share:

இந்தியா முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது: ப.சிதம்பரம்

கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2whqiId
Share:

தமிழகத்தில் மேலும் 86 கொரோனா வழக்குகள் பதிவானது; மொத்த எண்ணிக்கை 571...

தமிழகத்தில் இன்று புதிதாக 86 கொரோனா வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும், புதிய வழக்குகளுடன் தமிழகத்தில் மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 571-ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2VgUH23
Share:

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் 112 தனியார் மருத்துவமனைகள்...

மாநிலத்தில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வைரஸ் அதிகரிப்பதைத் தடுக்க நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 26 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 112 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2JESJCX
Share:

ஈரோட்டில் 1 லட்சம் பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்...

ஈரோட் மாவட்டத்தில் இதுவரை 27 பேர் COVID-19-க்கு சாதகமாக சோதனை முடிவு பெற்றுள்ள நிலையில், 1,09,837 நபர்களைக் கொண்ட மொத்தம் 29,834 குடும்பங்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/39JdvMj
Share:

Saturday, April 4, 2020

தமிழகத்தில் அதிவேக ரத்த மாதிரி ஆய்வு தொடங்கப்பட வேண்டும் - PMK

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கலாம் என நம்பப்படும் பகுதிகளில் இரத்தமாதிரி சோதனையை அதிக அளவில் நடத்த அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/2Rc2Wep
Share:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2x6L1ie
Share:

மகாவீரர் பிறந்த நாளில் மனிதகுலத்துக்கு எதிரான கொடுமைகள் ஒழியட்டும்: PMK

மகாவீரர் பிறந்த நாளில் மனிதகுலத்துக்கு எதிரான கொடுமைகள் ஒழியட்டும் என்று மருத்துவர் இராமதாசு அவர்களின் மகாவீரர் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/3aK2sUz
Share:

இளைஞர்களே... ஊரடங்கை மதித்து வீடடங்குங்கள்: அன்புமணி கோரிக்கை!

ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் அடங்கி தம்மையும், நாட்டையும் இளைஞர்கள் காக்க வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/3bQ3CxL
Share:

லாக்-டவுன் காலத்தில் உங்கள் ஈபிஎஃப் பணத்தை ஆன்லைன் மூலம் திரும்பப் பெறலாம்!! எவ்வாறு?

புதிய தொற்று விதிகளின் கீழ், ஓய்வூதிய நிதிகள் திரும்பப் பெறும் கோரிக்கைகள் அனைத்தும் மூன்று நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3dOR5wB
Share:

53 வயது பெண் மரணம்... தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

தமிழகத்தில் COVID-19 தொற்று மூலம் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் மூன்றாவது மரணம் இதுவாகும். முதல் நோயாளி, மார்ச் 25 அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இறந்தார். 2வது வில்லுபுரத்தை சேர்ந்த கொரோனா நோயாளி, வில்லுபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலமானார்.

from Tamil Nadu News https://ift.tt/2XaHtpN
Share:

250 கி.மீ பயணம் செய்து கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற வந்த 8 மாத கர்ப்பிணி செவிலியர்

மூன்று நாட்களுக்குள் ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் (பி.எச்.சி) மீண்டும் பணியில் சேர செவிலியருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தகவல் கிடைத்ததும், தன்னைப் பற்றியும் (வினோதினி) தன் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றியும் கவலைப்படாமல் திருச்சியிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள ராமநாதபுரத்திற்கு செல்ல முடிவு செய்தார்.

from Tamil Nadu News https://ift.tt/3c1KOvV
Share:

தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்வு

சனிக்கிழமை காலை இறந்த 51 வயதான இவர், டெல்லியின் நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டார்

from Tamil Nadu News https://ift.tt/2JExHVi
Share:

Friday, April 3, 2020

கொரோனா தடுப்பு பணி: தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்: PMK

தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2wcI8w5
Share:

நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்... -கமல்!

‘மக்கள் மத்தியில் வெளிச்சம் கொண்டு வர நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்’ என மோடியின் இன்றைய அறிவிப்பை விமர்சித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்.

from Tamil Nadu News https://ift.tt/2V0bs1e
Share:

கொரோனா பாதிப்பு பட்டியல்: இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்த தமிழ் நாடு

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அதற்கு அடுத்த இடத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 43 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/39Hp3Qh
Share:

நூறு நூறாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் தமிழகத்தில் 102 பேருக்கு..

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதேபோல இந்த தொற்று நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகிறது.

from Tamil Nadu News https://ift.tt/2x0EJkb
Share:

புதிதாக வரும் கைதிகளுக்கு தனி சிறை... தமிழக சிறைத் துறை தகவல்...

மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் ஏற்கனவே அடைக்கப்பட்டுள்ள கைதிகள், புதிய கைதிகளிடமிருந்து கொரோனா தொற்று பெறாமல் இருப்பதை உறுதிசெய்யும் முயற்சியில், தமிழக சிறைத் துறை 37 நகரங்கள் / மாவட்டங்களில் உள்ள மாவட்ட சிறைகள், துணை சிறைகள் மற்றும் போர்ஸ்டல் பள்ளிகளுக்கு புதியவர்களுக்கு தனி இடமளிக்க அறிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2V16Ck2
Share:

கொரோனா வார்டுகளில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் தற்போது சென்னையிலும்...

கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்கு உறுவாக்கப்பட்ட ரோபோக்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சோதிக்கப்பட்டது.

from Tamil Nadu News https://ift.tt/3aGSdjI
Share:

நெய்வேலி TASMAC கடைகளில் திருட்டு; ₹2.30 லட்சம் மதிப்புள்ள சரக்குகள் மாயம்...

கொரோனா ஊரடங்கு மத்தியில் நெய்வேலி TASMAC கடைகளில் இருந்து விலையுர்ந்த மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ள விஷயம் தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3dO8CVv
Share:

காவல்துறையினர், 108 அவசர ஊர்தி பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் -PMK!

காவல்துறையினர், 108 அவசர ஊர்தி பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2UEWTBm
Share:

Thursday, April 2, 2020

கொரோனாவுக்கு எதிரான போர்: தமிழக அரசை பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா

கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3bLTOFb
Share:

கொரோனா முழு அடைப்பு விதி என்றால் என்ன? மீறினால் என்ன நடக்கும்?

கொரோனா வைரஸ் நோய் (COVID-19) ஒரு அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்கப்பட்டதன் வெளிச்சத்தில், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் (TNPHA), 1939 மற்றும் தொற்று நோய்கள் சட்டம், 1897 ஆகியவற்றின் கீழ் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவது சட்டப்படி குற்றம் என பொது இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2UWgETF
Share:

தமிழ்நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ்.. இவர்கள் தப்லிகி ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்கள்

கொரோனா வைரஸ் சோதனையில் மேலும் 75 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 74 பேர் டெல்லியில் உள்ள தப்லிகி ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்கள்.

from Tamil Nadu News https://ift.tt/3ayp7D8
Share:

N95 கவசங்கள், வெண்டிலேட்டர்கள் வாங்க ₹3000 கோடி வழங்கிட வேண்டும்... -tnGovt

பிரதமர் மோடியுடனான தனது வீடியோ கான்ப்ரஸிங் போது, ​​தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மாநிலத்திற்கு சோதனை கருவிகளின் விநியோகத்தை அதிகரிக்க 3000 கோடி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

from Tamil Nadu News https://ift.tt/2X3KAQE
Share:

Video: கொரோனாவை எதிர்க்க வந்துவிட்டது கிருமிநாசினி சுரங்கப்பாதை...

மிகவும் அசாதாரணமான மற்றும் நிச்சயமாக தேவைப்படும் ஒரு நடவடிக்கையில், தமிழகத்தின் ஒரு மாவட்டம், COVID-19 - க்கு எதிராக மிகவும் மாறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுவியுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2JzZqGC
Share:

கோவா-வில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவி செய்த ஆட்சியர்...

கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் கோவா-வில் சிக்கித் தவிக்கும் 200-க்கும் மேற்பட்ட தமிழக மீன்பிடி கூலித் தொழிலாளிகளை கோவா ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

from Tamil Nadu News https://ift.tt/341YyDO
Share:

Wednesday, April 1, 2020

கொரோனாவுக்கு பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும்!

நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2xCAwDn
Share:

EMI ஒத்திவைப்பு ஏமாற்று வேலை ஆகிவிடக்கூடாது: வட்டி தள்ளுபடி வேண்டும்...

வட்டி தள்ளுபடி வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2USersA
Share:

தேனியில் உள்ள அம்மா உணவகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் திடீர் ஆய்வு...

தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் இட்லி, பொங்கல் சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்!!

from Tamil Nadu News https://ift.tt/2JtEUqW
Share:

தமிழக அரசு அறிவித்தப்படி... இன்று முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 விநியோகம்

கொரோனா வைரஸ் லாக்-டவுன் காரணமாக வீடுகளில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பாக ஆயிரம் ரூபாய் விநியோகம் செய்யப்படும்.

from Tamil Nadu News https://ift.tt/3aBOvrI
Share:

தமிழக அரசு அறிவித்தப்படி... நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 விநியோகம்

கொரோனா வைரஸ் லாக்-டவுன் காரணமாக வீடுகளில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பாக ஆயிரம் ரூபாய் விநியோகம் செய்யப்படும்.

from Tamil Nadu News https://ift.tt/2JxWwlq
Share:

தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா... மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3dLkDet
Share:

Audio விழிப்புணர்வு !! விழித்திரு... விலகி இரு... வீட்டிலேயே இரு... உங்களுடன் பேசும் தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களிடம் கோரிக்கை வைத்து ஆடியோ விழிப்புணர்வு செய்தியை வெயிட்டுள்ளார். அதில் விழித்திரு.. விலகி இரு.. வீட்டிலேயே இரு.. என மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2R03gwC
Share:

Blog Archive

Definition List

Unordered List

Support